அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தமிழக கோயில்களில் எல்ஈடிகள் வைத்துத் திரையிட காவல்துறையினர் தடை அகற்றப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டது. பொதுமக்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்இடி துறையை காவல்துறையினர், “அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது” என கூறி அதை அகற்றி வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 400 இடங்களில் பொதுமக்கள் ராமர் கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளது. அதை காவல்துறையினர் அனுமதி இல்லை,” எனக்கூறி அகற்றி வருகின்றனர். இது இந்து விரோத போக்கை காண்பிக்கின்றது,” என பதிவிட்டுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.