திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர் பாபு, காந்தி ஆகியோர் பங்கேற்றனர்…

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலாநிதி வீராசாமி சென்னை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டரும் பங்கேற்றனர். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

அவரைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகையை வழங்கி மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மீனவர்களின் படகுகள்,வலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் தற்போது வழங்கப்படுகிறது.

விசைப்படுகள், பகுதியாக சேதம் அடைந்த படகுகள், வலைகளை உள்ளிட்டவைக்கு நிவாரணம் வழங்கபடுகிறது. தலா 9000 என மொத்தம் 12கோடியே 89லட்சம் இன்று பாதிக்கபட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீனவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது என்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீனவர்கள் மீது முதலமைச்சர் தனி அக்கறை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் பல சான்றுகள் உள்ளது.

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, யார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுகிறார்களோ அவர்கள் தான் கடவுளுக்கு சமம் என்னை பொறுத்தவரை மீனவர்கள் ஆகிய நீங்கள் தான் கடவுள்களை (உங்களை)சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்தியாவின் ஊட்டச்சத்து மிகுந்த மாநிலம் தமிழ்நாடு தான் ,
அதற்கு காரணம் மீனவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் மீன்கள் தான்.

தமிழ்நாடு மிக்சாம் புயல் பேரிட நிவரணதிற்கு கேட்ட தொகை ஒரு ரூபாய் கூட இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை, இந்த கடும் சூழலிலும் முதலமைச்சர் மீனவர்களுக்கான நிவாரணத்தை வழங்கி உள்ளார், உங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவார்.

இந்த ஆட்சியில் மீன்பிடி தடைகால நிதி 5000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களத்தில் நின்று உதவி செய்தவர்கள் மீனவர்கள் தான். இந்த அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக, தூதர்களாக நீங்கள் (மீனவ மக்கள்) செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

2 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

13 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

59 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.