திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர் பாபு, காந்தி ஆகியோர் பங்கேற்றனர்…
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலாநிதி வீராசாமி சென்னை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டரும் பங்கேற்றனர். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகையை வழங்கி மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மீனவர்களின் படகுகள்,வலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் தற்போது வழங்கப்படுகிறது.
விசைப்படுகள், பகுதியாக சேதம் அடைந்த படகுகள், வலைகளை உள்ளிட்டவைக்கு நிவாரணம் வழங்கபடுகிறது. தலா 9000 என மொத்தம் 12கோடியே 89லட்சம் இன்று பாதிக்கபட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீனவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது என்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீனவர்கள் மீது முதலமைச்சர் தனி அக்கறை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் பல சான்றுகள் உள்ளது.
எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, யார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுகிறார்களோ அவர்கள் தான் கடவுளுக்கு சமம் என்னை பொறுத்தவரை மீனவர்கள் ஆகிய நீங்கள் தான் கடவுள்களை (உங்களை)சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவின் ஊட்டச்சத்து மிகுந்த மாநிலம் தமிழ்நாடு தான் ,
அதற்கு காரணம் மீனவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் மீன்கள் தான்.
தமிழ்நாடு மிக்சாம் புயல் பேரிட நிவரணதிற்கு கேட்ட தொகை ஒரு ரூபாய் கூட இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை, இந்த கடும் சூழலிலும் முதலமைச்சர் மீனவர்களுக்கான நிவாரணத்தை வழங்கி உள்ளார், உங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவார்.
இந்த ஆட்சியில் மீன்பிடி தடைகால நிதி 5000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களத்தில் நின்று உதவி செய்தவர்கள் மீனவர்கள் தான். இந்த அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக, தூதர்களாக நீங்கள் (மீனவ மக்கள்) செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.