தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழக அரசுக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் டிஆர்பி ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திமுக நிர்வாகிகளில் இவரும் முக்கியமானவராவார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ”தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட் விலை ரூ.17,748 முதல் ரூ. 20,665 வரை விற்கப்படுகிறது; இந்த சேவை கட்டணத்தில் இலங்கைக்கே சென்று விடலாம். அதுமட்டுமல்லாமல், ”PeriAir” என்ற பெயரில் மாநில அரசே விமான சேவையை தொடங்கலாமே? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.