சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தினால் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது. நேற்றிரவு திடீரென்று சதுப்பு நிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சதுப்பு நிலத்தில் இருந்த கோரைப்புற்கள், செடிகள், மரங்கள் தீயில் கருகின. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சதுப்பு நிலத்தில் உள்ள கோரைப்புற்கள், செடி, மரங்கள் காய்ந்து போய் இருந்த நிலையில் தீயில் அவை எரிய தொடங்கின.
மேலும் படிக்க: ‘நீ போய் பு***து’… வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் ; அதிர்ச்சி வீடியோ!
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சதுப்பு நிலம் என்பதால் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு உடனடியாக அவர்களால் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு தீ பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீ மேலும் பரவுவதை தடுத்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.