பொய் வழக்கு போடுவதில் திமுக ஆட்சி ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இரண்டாவது நாளாக ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குறிப்பாக அதிமுகவை முடக்க வேண்டும் என பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் வகையில் பொய் வழங்கு போடும் முதல்வர், சர்வாதிகாரிகள் எல்லாம் வராலாற்றில் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு புத்தகம் கூட தயார்.
பொய் வழக்கு போட்ட பின் சட்ட போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கி உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட்டு வருகின்றேன். பேசினால் சிறை என்பது சர்வாதிகார நாட்டில் தான் நடக்கும். ஆகையால் இது குறித்து குடியரசு தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் மனு அளித்துள்ளோம். அதற்கான பதிலை திமுக அரசு சொல்ல வேண்டும்.
அமைச்சர் ராஜகண்ணப்பனை நீக்கமால் வேறு இலக்கா மாற்றம் செய்திருப்பது அவருக்கு கிடைத்த பரிசு தான். தண்டனை அல்ல. பெயருக்கு வெளியே திராவிட மாடல் என சொல்வது. வெளிநாடு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பது நினைத்தால், மாலு மாலு சுரங்கனிக்காக மாலு என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. வெளிநாடு பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும், என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.