பொன்முடியை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.. வீடு தேடிச் சென்று ஆறுதல்!
வருமானத்துக்கு அதிகமாக அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடிக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு, பொன் முடியும் அவருடைய மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இருவருக்கும் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியும் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் பொன்முடி. நேற்று காலை இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு திடீர் வருகை தந்தார் மு.க.அழகிரி.
அவரை தொடர்ந்து முரசொலி செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மற்றொரு சகோதரருமான தமிழரசும் பொன்முடி இல்லத்துக்கு சென்று பேசியுள்ளனர்.
பின்னர் மு.க.அழகிரி, முரசொலி செல்வம், தமிழரசு மூவரும் வெளியே வந்து ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டனர். தண்டனை அறிவித்ததால் மன உளைச்சலில் உள்ள பொன்முடிக்கு ஆதரவாகவும், ஆறுதலாக பேசியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த தண்டனையை எதிர்த்து ஒரு வாரம் கழித்து பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.