இன்ஸ்பெக்டரிடம் LINK க்ளிக் மூலம் மோசடி.. வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் அபேஸ் : இளையதள கேடிகளுக்கு வலை.!!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 7:16 pm
Ins
Quick Share

நவீன உலகில் சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லின்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

அவ்வாறு தற்போது, ​​கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் சாமானியர்களுக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கும் சவால் விடுகின்றனர்.

இந்நிலையில் கொடுமூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கணக்கில் இருந்து இரண்டு ₹ 2.20 லட்சம் சைபர் குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் போதையில் கத்தியுடன் சுற்றிய ரவுடி.. மடக்கி பிடித்த போலீஸ் : வைரலாகும் வீடியோ!

இம்மாதம் நான்காம் தேதி இன்ஸ்பெக்டர் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் போனுக்கு வந்த லின்க்கை கிளிக் செய்த பின்னர் பர்ஸ்னல் சிம் பிளாக் ஆனதால் இதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் சிம் கார்ட் ஆக்டிவேட் ஆனவுடன் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தார்.

வங்கி அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கேட்டபோது சைபர் குற்றவாளிகளால் போன் ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 141

0

0