வயநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 250 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்ட உடன் படிக்கும் நிறைய மாணவர்களைக் காணவில்லை என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரல்மலை பகுதிக்குப் போகவே பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.இனி அங்கு செல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் சொல்லியுள்ளனர்.
இனி நாங்கள் படிக்க எங்கே போவோம் என்ன செய்வோம் என்பது புரியாமல் இருக்கிறது என சொல்லியுள்ளனர் மாணவர்கள்.
பள்ளியின் நிர்வாகி ஒரு கன்னியாஸ்திரி பேசும்போது சூரல் மலை பகுதியில் இருந்து நிறைய மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து சென்றனர்.அந்த மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காணாமல் போயிருப்பதாக தெரிய வருகிறது .
முண்டக்கை என்ற இடமே இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது சூரல்மலை பகுதியில் முன்பு 350 வீடுகளுக்கும் மேல் இருந்தது.இப்போது வெறும் பத்து வீடுகள் மட்டுமே இருக்கிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரும் பேரழிவு எனவும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
This website uses cookies.