தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை?….முழு விபரம்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா ஒமிக்ரான் வைரஸ் நோய்த் – தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே தடை செய்யப்பட்ட அன்று அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இதர செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.

வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள லாக்டவுன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஊரடங்கை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எவற்றுக்கெல்லாம் தடை?

அத்தியாவசியம் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் தடை பொது பேருந்து போக்குவரத்து சேவை இன்று இயங்காது.

தியேட்டர்கள், மதுபான கடைகள், மத வழிபாட்டு மையங்கள் இயங்காது

கேளிக்கை தொடர்பான சேவைகள் இயங்காது

மற்ற நாட்களில் நிலவும் கட்டுப்பாடுகள் எப்போதும் போல தொடரும்.

எவற்றுக்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் கடந்த வாரங்களை போல இல்லாமல் இந்த வாரம் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும்.

கடந்த வாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சனிக்கிழமை இறைச்சி, காய்கறி கடைகளுக்கு போனதால் இந்த முறை ஞாயிறு அன்று இந்த வாரம் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்திவாசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்கும்

திருமணத்திற்கு செல்வோர் பத்திரிக்கைகளுடன் செல்ல வேண்டும்

உணவு கூடங்கள் செயல்படும். ஆனால் பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.

பெட்ரோல் பங்குகள் செயல்படும்.

UpdateNews360 Rajesh

Recent Posts

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

7 minutes ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

40 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

58 minutes ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

1 hour ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

This website uses cookies.