ஆதரவு கொடுத்தா கொடுங்க.. இல்லைனா? பாஜகவின் முடிவு குறித்து இபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேச்சு!!!

நெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வழிநடத்தப்பட்டு வரக்கூடிய இயக்கம் என குறிப்பிட்டார்.
தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வத்தின் செயல்பாடு கட்சியில் எப்படி இருந்தது என்பதை நாடறியும் புதிதாக நாங்கள் சொல்லி தெரியப்போவதில்லை என கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் புதியதாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதிமுகவை விட்டு ஏற்கனவே ஓபிஎஸ்சை நீக்கி விட்டோம் அவர் கட்சி தொடங்கி அவர் கட்சிக்கான ஒரு குழுவை அறிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியிடம் ஆதரவு கேட்க வேண்டியது தார்மீக உரிமை, இதன்படி பாஜகவிடம் ஆதரவை கேட்டோம் ஆதரவு கொடுத்தால் சரி , இல்லையென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக தனது பயணத்தை தொடரும்.

ஜனநாயக ரீதியில் முறைப்படி நாங்கள் உங்களிடம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க அவர்களிடம் சென்று பேசியதாக தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாரா என பாஜகவிடம் கேட்டுள்ளோம் வரவில்லையென்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திப்போம். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும்.

அதிமுகவில் நான்கு அணியும் இல்லை, ஏழு அணியும் இல்லை ஒரே அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பின்னால் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் உள்ளதாக தளவாய் சுந்தரம் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

14 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

15 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

16 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

16 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

17 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

18 hours ago

This website uses cookies.