கடவுள் ராமர் என் கனவில் வந்து… சர்ச்சையில் சிக்கிய இண்டியா கூட்டணி கட்சி அமைச்சர்!!!
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடந்து வருகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. அவரது மந்திரி சபையில் கல்வி மந்திரியாக பதவி வகித்து வருபவர் சந்திரசேகர்.
இந்நிலையில், அவர் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, கடவுள் ராமர் என்னுடைய கனவில் தோன்றினார். அவர் என்னிடம் பேசும்போது, மக்கள் என்னை மோசம் செய்கின்றனர். சந்தையில் என்னை விற்கின்றனர்.
அவர்கள் என்னை விற்பதில் இருந்து காக்க வேண்டும். அது இந்த பூமிக்கு பெரிய பலனளிக்கும் என கூறினார் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், கடவுள் ராமர் சாதி முறைக்கு எதிராக இருந்தவர். ராம்ஜி விரும்பிய வழியில் நாட்டை உருவாக்குவோம். அதன்பின்னர், அமெரிக்காவை எப்படி நாம் பின்னுக்கு தள்ளுவோம் என பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரான சந்திரசேகர் கடந்த 14-ந்தேதி பேசும்போது, 56 வகையான உணவு வகைகளை செய்து அவற்றில் பொட்டாசியம் சயனைடை கலந்து விட்டால், நீங்கள் உண்ண முடியுமா? இதே விசயம் இந்துத்துவத்தின் புனித நூல்களிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளன என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.