அட்சய திருதியை அமர்க்களப்படுத்தலாம் வாங்க… மளமளவென குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
22 April 2023, 8:27 am

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840க்கும், கிராமுக்கு ரூ.60 சரிந்து ரூ.5,665க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் மீண்டும் தங்கம் ரூ.45 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், இன்றும், நாளையும் அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்