கோடியில் புரளும் கோபாலபுரம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி : அண்ணாமலை பரபர!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இரு அமைச்சர்கள் சிறையில் இருப்பது போல, செந்தில்பாலாஜி சிறை செல்வது உறுதி அதற்கு பின்னர் அவர் 6வது முறையாக கட்சி மாறுவார் கரூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக சார்பில், மின் கட்டண உயர்வினை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஏராளமானோர் புதிய மற்றும் பழைய அரிக்கேன் விளக்குகளை ஏந்தியபடி, பாஜகவினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுக அரசின் மின் கட்டண உயர்விற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் கண்டன பேரூரையாற்றிய, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை ஏற்றியுள்ளனர். மேலும், கரூரினை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின்கட்டண உயர்வினை ஏற்படுத்தியுள்ளார்.

ஏன் மின் கட்டணம் உயர்வினை உயர்த்தினீர்கள் என்று கேட்டால், மோடி ஜி சொன்னாரு நாங்கள் செஞ்சோம், அதெப்படி, நீங்கள் செய்வீர்கள், மோடிஜியை திட்டி தீர்ப்பது தானே திமுக வினரின் வேலை, ஆகவே எந்த திட்டமாக இருந்தாலும் மோடி மீது பழிபோடுவது தான் திமுக வினரின் வேலை, டில்லியிலிருந்து வீடுகள் கட்டவும், ரோடு போடவும் கொடுத்தால் வீடு கட்டுவது முதல் ரோடு போடுவது வரை அனைத்திலும் தமிழக அரசு லஞ்சம் வாங்குகின்றது.

ஆகவே உங்களுக்கு வருமானத்தினை ஏற்படுத்துவதற்காக மட்டுமே மின் கட்டணம் உயர்வு என்று சொல்லியதோடு, கடந்த 2016 ம் ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தலின் போது இதே கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில், அப்போதைய எதிர்கட்சித்தலைவரும், தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இங்குள்ள செந்தில்பாலாஜி குறித்து என்ன சொன்னார் என்பதனை முதலில் சொல்கின்றேன் என்று அவர் கூறியதை ஒவ்வொன்றாக லிஸ்ட் போட்டு எடுத்துரைத்தார்.

15 முறை அமைச்சரவை மாற்றத்தின் போது கூட செந்தில்பாலாஜியின் அமைச்சரவை மாற்றம் செய்யவில்லை என்றும், ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்டத்தினையே செந்தில்பாலாஜியும், அவரது சகோதரருமான அசோக்குமார் ஆகியோர் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

பேருந்துகளில் ஜிபிஎஸ் மீட்டர் ஊழல், அது குறித்தும் நான் சட்டப்பேரவையில் கூறி இருக்கின்றேன் என்று அன்று மு.க.ஸ்டாலின் கூறியதை அப்படியே வாசித்தார். அப்படிப்பட்ட அதே வாய் தான், இன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், செந்தில்பாலாஜியை போல யாரும் இல்லை என்று புகழ்ந்துள்ளார்.

காரணம் கோபாலபுரத்திற்கு வரும் டாஸ்மாக் வருமானம், மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்கான வருமானம் என்றதோடு, டாஸ்மாக் மூலம் ஆண்டு வருமானம் பல கோடிகள் வருவது தமிழக ஏழை மக்களின் தாலி என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் நினைத்து பார்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்., இப்போதே சிறையை தேர்ந்தெடுத்து கொள், நான் சுயநலத்திற்காக கூறவில்லை, சிறை செந்தில்பாலாஜிக்கு உறுதி, அப்போது எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என்று பார்க்கலாம், என்றும், ஏற்கனவே ஐந்து கட்சிகளுக்கு சென்று வைகோ வை முதல்வராக்கலாம், தற்போது டிடிவி தினகரனை முதல்வராக்கலாம் என்றெல்லாம் கூறி விட்டு ஐந்து கட்சிகளுக்கு சென்றவர்.

சிறைக்கு சென்ற பின்னர் தான் 6 வது கட்சிக்கு மாறுவார், அதே போல, கரூருக்கு ஏர்போர்ட் வருவதற்காக ஒரு ஹோட்டல் உரிமையாளரும், இரண்டு டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் 420 ஏக்கர் நிலத்தினை வாங்கியுள்ளனர். அவர்களின் சொந்த நலனுக்காவும், அவர்களது சொகுசுவாழ்க்கைக்காக தான் ஏர்போர்ட் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.