திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக கேரளாவில் அரசு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி கேரள அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில் கேரள அரசு பஸ் கட்டணத்தை 73 ரூபாயிலிருந்து 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு பஸ்களிலும் அதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
This website uses cookies.