மீண்டும் சிக்கலில் பாரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்: கரூர் எஸ்.பி.யிடம் இசைப்பள்ளி ஆசிரியை புகார்..!!

கரூர்: பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பரதநாட்டிய கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் எஸ்.பி-யிடம் அரசு இசைப் பள்ளி ஆசிரியை புகார் அளித்தார்.

கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு கடந்த பிப்.28ம் தேதி ஆய்வுக்காக வந்த கலையியல் அறிவுரைஞரும், பரதநாட்டிய கலைஞருமான ஜாகிர் உசேன், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநரிடம் அங்கு பணியாற்றும் பரதநாட்டிய ஆசிரியை அண்மையில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் ஏப்.4ம் தேதி ஆசிரியையிடம் விசாரணை நடத்தி, ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படியும், தனது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஏப்.6ம் தேதி நடைபெற்ற விசாகா கமிட்டி விசாரணைக்கு ஆஜரான இசைப் பள்ளி ஆசிரியை, பின்னர் கரூர் திரும்பினார். தொடர்ந்து, எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று வந்த இசைப் பள்ளி ஆசிரியை, எஸ்பி ப.சுந்தரவடிவேலுவிடம் புகார் மனு அளித்தார்.

அதில், பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ள  பரதநாட்டிய கலைஞர்  ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

41 minutes ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

48 minutes ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

1 hour ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

2 hours ago

பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?

நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…

2 hours ago

விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…

தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…

4 hours ago

This website uses cookies.