கிராமசபைக் கூட்டத்தில், அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே அக்.,2ம் தேதியான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் தங்கள் பள்ளியில் உள்ள மின்சார இணைப்பு பிரச்சனை குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்.
இதுபோன்ற அலட்சியத்தினால் கட்டிடத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது..? யார் பொறுப்பு..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த மின்சார பிரச்சனையை சரிசெய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என்றும், உங்களுக்கு ஏதேனும் வருமானம் வந்தால், அதை வைத்து அதனை சரிசெய்து கொள்ளுமாறு பிடிஓ தெரிவித்ததாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அவர் அரசு பள்ளிகளே சாபக்கேடு என்றும், பேசாமல் வேலையை VRS கொடுத்து சென்று விடலாம் எனக் கூறிய அந்த ஆசிரியை கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
This website uses cookies.