அது துணை வேந்தர்கள் மாநாடு அல்ல : முழு நேர அரசியல்வாதியாவே ஆளுநர் மாறிட்டாரு : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!

முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து தமிழக ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் பேச்சு மட்டுமின்றி சமீப காலமாக ஆளுநரின் பேச்சுக்கள் அவர் முழு அரசியல்வாதி போலவே உள்ளன.

சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி. தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டுள்ளார்

உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, ஆளுநர் தனது அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டை தமிழகம் என அவர் மாற்ற மேற்கொண்ட முயற்சிகள், திராவிட நாடு என்ற ஒன்று கிடையாது என அதற்கு எதிராக ஆளுநரின் பேச்சுக்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக இருந்து வந்தது.

தற்போது தொழில் முதலீடுகளை இருப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்களை மறைமுகமாக சாட்டியிருப்பது போல் அவரது பேச்சுக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

முதலீடுக்கான வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்து ஆளுநர் பேசுவது ஏற்றுகொள்ளமுடியாது என கூறினார். தமிழகத்தில் கல்வியின் தரம் சரியல்ல என குற்றம் சாட்டி வரும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன எனவும் சிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியீட்டுல அறிக்கையில் கூட தமிழகத்தில் சிறந்த கல்வி தரம் இருப்பதாகவும் மேலும் மேற்கண்ட பட்டியலில் தமிழகம் முன்னணி இடம் வகிப்பதற்கு தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் காரணம் என தெரிவித்தார். இவற்றை மறைப்பது போல தமிழக ஆளுநர் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார்..? பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார்.

சீனா, ஜப்பான் தைவான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது.

இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். முதலீட்டுக்கு உகந்த சூழல் தமிழகத்தில் நிலவுவதாலும் அனைத்து தரவுகளில் அடிப்படையிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும் முதலீடு செய்ய வரக்கூடிய நிறுவனங்கள் தமிழகத்தை விரும்புகின்றன என தெரிவித்தார்.

தமிழகத்தில் வரக்கூடிய பெரு நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற மனித வளம் மற்றும் திறன்கள் இங்கு உள்ள இளைஞர்களிடம் இருப்பதால் மட்டுமே அவர்கள் தமிழகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அரசியலுக்கு செல்ல விருப்பம் இருந்தால் தமிழக ஆளுநர் அதற்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தக்கூடாது எனவும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வரவேண்டும் என தெரிவித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

16 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

59 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.