கம்யூனிச நாடான சீனாவில்,குடிமக்களின் மேல் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம்.டிவி, சமூக வலைதளம் என எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு முழுமையாக இருக்கும்.
அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது அரசு ஊழியர்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு, ரகசியங்களை பாதுகாக்க பயிற்சி அளிக்கப் படுகிறது.
அரசு ரகசியங்களை கையாளும் ஊழியர்கள், முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து விலகிய பிறகும், ரகசிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கட்டுப்பாடுகள் ஆயுள் முழுவதும் நீடிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரகசியங்களை பாதுகாக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் முக்கிய ஆவணங்களை பார்க்க வேண்டும். ஆவணங்களை நகலெடுக்கவோ, பதிவிறக்கவோ முடியாது.
ரகசியங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது
சீன அரசு பிறப்பித்துள்ளது இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.