குடும்பத்தில் பல உறவுகள் இருந்தாலும் தாத்தா பாட்டி உறவு என்பது குடும்பத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம். தாத்தா போட்டிகள் பேரக்குழந்தைகள் மீது அதிக அக்கறையோடும் அரவணைப்போடும் இருப்பார்கள்.
தென்காசி மாவட்டத்தில் தனது இரண்டரை வயது பேரனை அவனது தாத்தா சைக்கிளில் பின் அமர வைத்து அரவணைப்போடு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் புல்லுக்கட்டு வலசை பகுதியில் சாரல் மழை பெய்து வந்ததால் பேரன் மழையில் நனையாமல் இருக்க டவலால் உடலை மூடியுள்ளார். மேலும் பேரன் கீழே விழாமல் இருக்க கயிறால் அவனை சைக்கிளில் கட்டியுள்ளார். ஆனால் அவர் நனைந்தபடியே செல்கிறார்.
தாத்தாவின் இந்த பாசத்தை பார்த்து வியந்த வழிப்போக்கர் ஒருவர் தாத்தாவை வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த நபர் எழுப்பிய கேள்விக்கு முதியவர் அளித்த பதிலில், எனது மகனுக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் மருமகள் பிரசவத்துக்காக அவளது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அவள் வீட்டிலும் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாததால் பேரனை என்னிடம் ஒப்படைத்தார். நான் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி செய்து வருகிறேன் காலையிலையே பேரனை என்னோடு அழைத்து சென்று விட்டேன். தற்பொது வேலை முடிந்து வீட்டிக்கு செல்கிறோம் என புன்னகையோடு தெரிவிக்கிறார்.
என்ன தான் ஆடி ஓடி சம்பாதித்தாலும் இதுபோன்ற உறவுகளும் அவர்களின் பாசமும் கிடைப்பது என்பது வரமாக இருக்கக் கூடிய நிலையில் இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
This website uses cookies.