அருமையான யோசனை… போக்சோ சட்ட விழிப்புணர்வுகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு முடிவு!!!
கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம், இது வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கேரள உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி, நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், குழந்தைகள் ஒருமித்த உறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட, POCSO சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்ட விதிகளை நன்கு அறிந்திருக்கவில்லை என்பது குறித்தும் கவலை தெரிவித்திருக்கிறார்.
பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்த பாடப்புத்தகங்கள் உரிய முக்கியத்துவம் மற்றும் உணர்திறனுடன் பாடத்தை கையாளும் நிபுணர்களால் தயாரிக்கப்படும் என்று SCERT வலியுறுத்தியது.
அதன்படி, 1, 3, 5, 6, 8, மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஒருங்கிணைக்கப்படும் என்றும் SCERT நீதிமன்றத்திற்கு உறுதியளித்தது. மேலும், 2,4,7 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு பாடப்புத்தகம் 2025-2026 கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த ஆண்டின் மே மாதம், போக்ஸோ விழிப்புணர்வு பாடங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டதையும் மாநில அரசு மேற்கோள் காட்டியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.