முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு பச்சைக்கொடி… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இவ் வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வேலுமணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜரானார்.அவர், ”வழக்கு ரத்து கோரிய மனுக்களை, தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், மத்திய அரசுக்கு ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ராஜு, இந்த வழக்கில் எப்படி ஆஜராகலாம்?” என வாதிட்டார்.

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, ”மத்திய அரசின் அனுமதி பெற்றே, இவ்வழக்கில் ஆஜராகிறேன். ”அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரித்ததால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களையும், இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம்,” என்றார்.

தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுக்களை, தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது.
அவ்வாறு விசாரித்தால், மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். அதனால் தான், வழக்கு ரத்து கோரிய மனுக்களை, பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளை முதல் அமர்வு விசாரிப்பதற்கு, அட்வகேட் ஜெனரல் தெரிவித்த ஆட்சேபனையில் நியாயம் இல்லை. மத்திய அரசு சார்பில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, இவ்வழக்கில் வேலுமணிக்கு ஆஜராகவும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் ராஜுவுக்கு வழங்கப்பட்ட அனுமதியின்படி, அவர் ஆஜராகிறார். அவர் ஆஜராவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதை ஏற்க முடியாது, அது, நிராகரிக்கப்படுகிறது என முதல் அமர்வு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேலுமணி மீதான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க தடை விதிக்க மறுத்தது.

வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக்கூறியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.