கடந்த வாரம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தை கூறாமல் கைது செய்துவிட்டனர் என கூறி செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற விதி 41ஏவின்படி எதற்காக கைது செய்கிறார்கள் என்பதை கைது செய்யப்படுவோரிடம் கூற வேண்டும். ஆனால் கைது காரணத்தை என்னவென்றே அமலாக்கத்துறை கூறவே இல்லை.
சட்டவிரோதமாக இந்த கைது நடைபெற்றுள்ளது என பல்வேறு வாதங்களை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முன்வைத்தார். 2 மணிநேரமாக நடைபெற்ற இந்த வாதத்தை அடுத்து, அமலாக்கத்துறைனர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க தங்களுக்கு அவகாசம் கேட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.