பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த பலகை அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பழனி கோவிலில் இந்து அல்லாதவர்களை கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாற்று மதத்தை சார்ந்தவர்களிடம் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்ற உறுதிமொழி எழுதி வாங்கிய பின் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.