ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் : கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை : ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஒகேனக்கல்‌ இரண்டாவது குடிநீர்‌ திட்டத்தை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில்‌ ஆரம்பிக்கப்படும்‌ என்ற ஓர்‌ அறிவிப்பை கண்டு கர்நாடக நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ வெகுண்டெழுந்து தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்த ஒகேனக்கல்‌ இரண்டாவது குடிநீர்‌ திட்டத்தை செயல்பட விடமாட்டோம்‌ என்று ஓர்‌ அறிவிப்பை செய்திருக்கிறார்‌.

குடிநீர்‌ தேவைக்கு தண்ணீர்‌ தரமாட்டோம்‌ என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம்‌ என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும்‌ சரி சட்டபூர்வமான அடிப்படையிலும்‌ சரி தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல்‌ இரண்டாவது குடிநீர்‌ திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு ஞாபகம்‌ இருக்கும்‌ என்று கருதுகிறேன்‌. காவிரி நடுவர்‌ மன்றம்‌ இறுதி தீர்ப்பை வழங்குகிற பொழுது, முதலில்‌ காவிரி பாயும் மாநிலங்களில்‌ ஒவ்வொரு மாநிலமும்‌ காவிரி பாசன பகுதி எவ்வளவு என்று கணக்கிட்டு
அதற்குரிய விகிதாச்சார அடிப்படையில்‌ தண்ணீரை பகிர்ந்தளித்தார்‌.

அடுத்ததாக, காவிரி நதி நீர்‌ ஆணையம்‌ 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பில்‌ நிகர குடிநீர்‌ தேவைக்காக 2.2 டி.எம்‌.சி நீர்‌ ஒதுக்கியுள்ளது. அதாவது, சுமார்‌ 11 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக்‌ கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படி, அனைத்து பங்களிப்பும்‌ முடிந்து பிறகும்‌ எஞ்சிய நீர்ப்பங்கீட்டின்‌ கீழ்‌ 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு கிடைத்தது 25.71 டி.எம்‌.சி. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம்‌ அளித்த தீர்ப்பின்‌ மூலம்‌, காவிரி நதிநீர்‌ ஆணையத்தின் இறுதி தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.

மேலும்‌, இந்திய மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ நீர்வள கொள்கைகளின்படி குடிநீர்‌ தேவைக்குதான்‌ முதலிடம்‌ கொடுக்கப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு பிரிவு 18-ன்படி இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக்‌ கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, எப்படி பார்த்தாலும்‌, காவிரி-ஒகேனக்கல்‌ இரண்டாவது குடிநீர்‌ திட்டம்‌ நிச்சயம்‌ நிறைவேற்றப்படும்‌.

இறுதியாக ஒன்று, வீட்டுப்‌ பயன்பாடு, உள்ளாட்சிப்‌ பயன்பாட்டு விநியோகம்‌, தொழில்சார்‌ விநியோகம்‌ என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்தால்‌ எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்து நீர்‌ திருப்பிவிடப்பட்டாலும்‌, அது அந்த நீராண்டல்‌
சம்பந்தப்பட்ட மாநிலத்தின்‌ பயன்பாட்டுக்‌ கணக்கில்தான்‌ சேர்க்கப்படும்‌ என்பது காவிரி நடுவர்‌ மன்ற இறுதி தீர்ப்பின்‌ முடிவாகும்‌ என்று தெரிவித்துள்ளார்‌.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…

27 minutes ago

முதலமைச்சரும் விஜய் ரசிகர் தான்.. PK வந்தது ஏன்? – ஆதவ் அர்ஜுனா பேச்சு!

75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.…

33 minutes ago

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

3 hours ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

3 hours ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

5 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

17 hours ago

This website uses cookies.