தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த திட்டங்களை சிறப்பாக செய்து முடிக்க நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக இருப்பது டாஸ்மாக் துறை. தினந்தோறும் 50 முதல் 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் தமிழக அரசு மது விற்பனையே முக்கிய வருவாயாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்படுள்ளது.
மதுவிற்பனையில் தமிழகம் சாதித்து வரும் நிலையில், இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு மதுபான கடைகளை குறைக்க தொடர்ந்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதே நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள உத்தரவில், வியாழக்கிழமை (15.08.2024) அன்று சுதந்திர தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்.
FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்.
FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2024 (வியாழக்கிழமை) சுதந்திர தினம் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.