சென்னை ; வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக திமுக எம்எல்ஏவின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 18 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை எம்எல்ஏவின் மருமகள் அடித்து துன்புறுத்தியதுடன், பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தி வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும், தினமும் வேலை செய்யச் சொல்லி அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்தார். இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
This website uses cookies.