தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரன்வே வேலைகள் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவு பெறும் என்றார்.
இதைத்தொடர்ந்து விரைவில் தூத்துக்குடியில் இருந்து மாலை, இரவு நேரங்களில் அதிகபடியான விமான சேவைகள் இயக்கப்படும் எனக் கூறிய அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
தூத்துக்குடியில் நடைபெறும் பர்னிச்சர் பூங்காவில் தற்போது 2 நிறுவனங்கள் அமைப்பதற்கு உறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகளை தொடங்க உள்ளாத அவர் குறிப்பிட்டார்.
மேலும் சில தொழில் நிறுவனங்களும் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என்றார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது ஒரு இரயில் சேவை மட்டுமே உள்ளது கூடுதல் இரயில் இயக்குவது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் மதுரையில் நடைபெற இருக்கும் தென்மண்டல ரயில்வே கூட்டத்தில் இதுகுறித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.