தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரன்வே வேலைகள் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவு பெறும் என்றார்.
இதைத்தொடர்ந்து விரைவில் தூத்துக்குடியில் இருந்து மாலை, இரவு நேரங்களில் அதிகபடியான விமான சேவைகள் இயக்கப்படும் எனக் கூறிய அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
தூத்துக்குடியில் நடைபெறும் பர்னிச்சர் பூங்காவில் தற்போது 2 நிறுவனங்கள் அமைப்பதற்கு உறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகளை தொடங்க உள்ளாத அவர் குறிப்பிட்டார்.
மேலும் சில தொழில் நிறுவனங்களும் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என்றார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது ஒரு இரயில் சேவை மட்டுமே உள்ளது கூடுதல் இரயில் இயக்குவது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் மதுரையில் நடைபெற இருக்கும் தென்மண்டல ரயில்வே கூட்டத்தில் இதுகுறித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.