ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் உள்ள கிரண் இன்டர்நேஷனல் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியருக்கு தரும அடி கொடுத்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
போடுப்பல் பகுதியில் கிரண் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.அந்த பள்ளியில் நடன ஆசிரியராக வேலை செய்து வரும் நபர் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற அந்த மாணவி இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஏன் என்று பெற்றோர் விசாரித்தபோது நாட்டியம் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் நடன ஆசிரியர் தொடக்கூடாத பகுதிகளை தொட்டு தொல்லை கொடுக்கிறார் என்று அந்த மாணவி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பள்ளிக்குச் சென்று நடன ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
நடன ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடை பெற்று வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.