நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்!

நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் P. செந்தில்குமார் தலைமையில் வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்பதை வலியுறுத்தும் விதமாக என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட போது போலீசார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மீஞ்சூர் சாலையில் யாத்திரைக்கு தடை விதித்து பேசுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தனர் .

பரதம் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலையை உற்சாகமாக மலர் தூவி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்றனர்.

பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசுகையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களது கடைசி இதுதான்
என்றும், இந்தியாவை வடக்கு தெற்கு என பிரித்து பார்க்க வேண்டும்
அதில் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்

முதலமைச்சர்கள் சென்று டெல்லியில் ஆர்பாட்டம் நடத்துவது போன்ற மோசமான அரசியலை இந்திய வரலாற்றில் நான் பார்த்தது கிடையாது என்றும், நிதி பகிர்வு பற்றி கிளிப்பிள்ளை போன்று தமிழக முதல்வர் பேசுகிறார் என்றும் காங்கிரஸ் ஆண்டகாலத்தை விட பாஜக ஆட்சியில் தான் 192 சதவீதம் கூடுதலாக நீதி பங்கீடு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகவும், இந்தியாவை வடக்கு தெற்கு என பிரித்து பார்க்க வேண்டும் அதில் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் செயல்பாடு சரியில்லை அவர்களுக்கு சீட்டு வழங்காதீர்கள் என காங்கிரஸ் கட்சியினரே கூட்டம் போட்டு ஆங்காங்கு பேசி வருவதாகவும், தமிழகத்தில் திமுகவின் பஜனை கோஷ்டியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

நான் லேகியம் விற்பவன் தான் திராவிடகட்சிகள் என்ற பீடையை தமிழக மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டிய காலம் இது என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களது கடைசி இதுதான் என்றும் பாஜக ஊழலை எதிர்த்து பேச ஆரம்பித்ததற்கு பிறகு பங்காளி கட்சிகளுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்எம்ஆர் .ஜானகிராமன், பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவர் அன்பாலயா S. சிவக்குமார் மாவட்ட செயலாளர் T.நந்தன் தாமரைசோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

14 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

15 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

17 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

18 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

18 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

19 hours ago

This website uses cookies.