தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அப்போது அவர் கூறியதாவது..
தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், கல்லூரியில் ராக்கிங் செய்யப்பட்ட காரணத்தினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
எனவே, ராக்கிங் செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் லாக்கப் டெத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, முறையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்,
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.