I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக என்னை கூட அறிவிக்க வாய்ப்புள்ளது : பரபரப்பை கிளப்பிபய தமிழக அரசியல் பிரமுகர்!!
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்தான் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா என தேசிய ஜனநாயக கூட்டணியினர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் குறித்து குஷ்பும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜியா, அரவிந்த் கெஜரிவாலா, நிதிஷ்குமாரா, சரத்பவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிறந்த பிரதமராக இருப்பார் என திமுக நிர்வாகிகள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டாத குறையாக பேசி வருகிறார்கள். அது போல் இந்தியா கூட்டணியில் உள்ள நிதிஷ், மம்தா உள்ளிட்டோருக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒரு ஆர்வம் இருக்கிறது.
இந்த நிலையில் சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இல்ல திருமண விழாவில் அதன் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அவர் பேசுகையில் இந்தியா கூட்டணியில் முடிவெடுத்தால் நான் கூட பிரதமராகலாம். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் பொருத்தமான ருவர் பிரதமராக வருவார். ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வு குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ள பொருத்தமற்றது என்றும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லி வரும் நிலையில் முத்தரசன் நான் கூட பிரதமராகலாம் என கூறியுள்ளது, எந்த அளவுக்கு இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்ற சுதந்திரம் உள்ளது என்பதை எடுத்துக் கூறவே அவர் அது போன்று கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவில்தான் பிரதமர் மோடியை தவிர வேறு எந்த கூட்டணி கட்சித் தலைவரும் பிரதமராக முடியாது என்பதைத்தான் முத்தரசன் அவ்வாறு கூறியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.