நான் சனாதனவாதி.. என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன் : ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!!

நான் சனாதனவாதி.. என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன் : ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து திமுகவின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் சொல்லும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதனையும் விமர்சித்து வருகிறார் ஆளுநர். திமுகவினர் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ‘சனாதனம்’ தொடர்பாக தொடர்ந்து உயர்வாகப் பேசி வருகிறார் ஆளுநர். நேற்று கூட கடலூர் மாவட்டம் ஆதனூரில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் 100 பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவருவுச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது, சனாதனத்தின் வெளிப்பாடு.” எனத் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மம், மனித குலத்துக்கே விரோதமானது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் கூட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். இப்படியான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி தன்னை ஒரு சனாதனவாதி என வெளிப்படுத்தியுள்ளது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

8 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

9 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

10 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

10 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

11 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

11 hours ago

This website uses cookies.