நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்… கெஜ்ரிவால் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு.. ராகுல் காந்தி பேச்சு!
டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும் 3-ல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும் படிக்க: மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை.. அபாயத்திற்கான எச்சரிக்கை மணி : சொல்கிறார் தமிழக பாஜக துணை தலைவர்!
ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன் என்று தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.