பழனியில் கும்பாபிஷேகம் நடத்தினால் CM ஸ்டாலினுக்கு ஆபத்து… அர்ச்சகர்கள் சொன்ன பகீர் தகவல்.. திட்டமிட்டபடி விழா நடப்பதில் சிக்கல்!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோவில் அர்ச்சகர்களுக்கும் – அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம்தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பழனி கோவில் மூலவர் சிலையான நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்துவதில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அர்ச்சக ஸ்தானிக சங்கத்தலைவரும், பழனி கோவில் மூத்த அர்ச்சகருமான கும்பேஷ்வர குருக்கள், பழனி கோவில் அர்ச்சகர்களுக்கு வாட்சப் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பழனி கோவில் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்த சொல்வதாகவும், ஆனால், அதை மறுத்துள்ளதாகவும்‌ தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அர்ச்சகர்களிடம் திருக்கோவில் சார்பில் கையெழுத்து கேட்டால் யாரும் போடவேண்டாம் என்றும், மீறி கையெழுத்து போட்டால் பிரச்சினைகள் வந்தால் உதவிக்கு வரமுடியாது, என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிப்பதாவது:- பழனி கோவில் மூலவர் சிலையை பலப்படுத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கான நாள் மிகவும் குறைவாக இருப்பதால், கோவில் கருவறை மற்றும் நவபாஷாண மூலவர் சிலையை பலப்படுத்தும் பணிகளை சரியாக முடிக்க முடியாது. எனவே, கும்பாபிஷேகத்தை அவசர கதியில் நடத்த வேண்டாம் என அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதை அதிகாரிகள்‌ மற்றும் அறங்காவலர்கள் ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.

எனவே, சக அர்ச்சகர்களை எச்சரிக்கும் விதமாக தலைமை குருக்கள் இந்த ஆடியோ அனுப்பியுள்ளார். மேலும், கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 27ம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் எனபதால் பூரம் நட்சத்திரத்தை கொண்ட தமிழக முதலமைச்சர் ஸடாலினுக்கு கேடு தரும். நாட்டின் மன்னனின் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளன்று எவ்வித அரசு சார்பில் எவ்வித காரியங்களையும் நடத்தக்கூடாது என்பது விதி. அவ்வாறு விதிமீறி நடந்தால் மன்னனுக்கு கேடாக முடியும் என்பது விதி.

எனவே‌ குறிப்பிட்ட அந்த நாளில் கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டு மன்னர் என்ற முறையில் தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடு ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பழனி அர்ச்சகஸ்தானிய சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்களிடம் கேட்டபோது :- பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மருந்து சாத்தாமலேயே கும்பாபிஷேகத்தை நடத்துமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஆகம விதிகளை மீறிய செயல். அவ்வாறு செய்தால் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு முன்னதாக இதுபோன்ற செயல்களால் ஏற்பட்டுள்ள விபரீதங்களை மறந்துவிடக்கூடாது.

மூலவரின் பாதுகாப்பு முக்கியமானது. ஏற்கனவே, மூலவர் சிலைக்கு செய்து வந்த ஆறுகால அபிஷேகங்களும் எம்ஜிஆர் காலத்தில் நிறுத்தப்பட்டது. எனவே, இதுபோன்ற ஒவ்வொன்றையும் நிறுத்தினால் மூலவர் சிலை பலமில்லாமல் போகும். மருந்து சாத்தாமல் அவசரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தினால், நாடு சுபிட்சமின்றி போகும், எனக் கூறினார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் நிலையில், தற்போது, மூலவர் சிலையின் தன்மை மற்றும் அதன் பலம் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிஅரசர் பொங்கலியப்பன் தலைமையிலான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மூலவர் சிலைக்கு மருந்து சாத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

60 minutes ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

3 hours ago

This website uses cookies.