செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனையடுத்து, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்;- தங்களது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா.

ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விட எம்ஜிஆர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்திற்கு அதிகம் பேர் வந்துள்ளனர். எந்த கொம்பானாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க கூட முடியாது. ஸ்டாலினை எத்தனை பி டீம் உருவாக்கினாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

உங்கள் தலைவரைப் போல, வீட்டில் இருப்பவர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவைத் தோற்றுவிக்கவில்லை.

வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைகளால் திமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்தவுடன் ஒட்டுமொத்த அமைச்சரவையே மருத்துவமனைக்கு சென்ற ஏன்? ஆட்சியை காப்பாற்றவே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினும், அமைச்சர்களும் சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் நீங்கள் இருப்பது கோட்டை அல்ல. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக. 31 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிச் சென்றுள்ளனர். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் முதன்மை முதல்வர் தான் என்று சொல்லிக் கொள்கிறார்.

2 ஆண்டுகால திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட ஆட்சி என மக்கள் விமர்சனம் செய்கின்றனர். மக்களை பற்றி சிந்திக்காத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் தொட்டு பார், சீண்டிப் பார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறி மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். மின்சாரக் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியையும் கடுமையாக உயர்த்திவிட்டது விடியா திமுக அரசு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது கர்நாடக அரசு. இந்தியாவை ஒருங்கிணைப்பேன் எனக் கூறும் முதலமைச்சர் கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கான தண்ணீரை முதல்வர் பெறாதது ஏன்? எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

19 minutes ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

1 hour ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

2 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

2 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. போதைப்பொருளுடன் வந்த முன்னணி நடிகர்..!!

படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…

3 hours ago