செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனையடுத்து, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்;- தங்களது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா.

ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விட எம்ஜிஆர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்திற்கு அதிகம் பேர் வந்துள்ளனர். எந்த கொம்பானாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க கூட முடியாது. ஸ்டாலினை எத்தனை பி டீம் உருவாக்கினாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

உங்கள் தலைவரைப் போல, வீட்டில் இருப்பவர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவைத் தோற்றுவிக்கவில்லை.

வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைகளால் திமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்தவுடன் ஒட்டுமொத்த அமைச்சரவையே மருத்துவமனைக்கு சென்ற ஏன்? ஆட்சியை காப்பாற்றவே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினும், அமைச்சர்களும் சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் நீங்கள் இருப்பது கோட்டை அல்ல. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக. 31 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிச் சென்றுள்ளனர். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் முதன்மை முதல்வர் தான் என்று சொல்லிக் கொள்கிறார்.

2 ஆண்டுகால திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட ஆட்சி என மக்கள் விமர்சனம் செய்கின்றனர். மக்களை பற்றி சிந்திக்காத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் தொட்டு பார், சீண்டிப் பார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறி மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். மின்சாரக் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியையும் கடுமையாக உயர்த்திவிட்டது விடியா திமுக அரசு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது கர்நாடக அரசு. இந்தியாவை ஒருங்கிணைப்பேன் எனக் கூறும் முதலமைச்சர் கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கான தண்ணீரை முதல்வர் பெறாதது ஏன்? எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

3 minutes ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

33 minutes ago

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

48 minutes ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

1 hour ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

1 hour ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

2 hours ago

This website uses cookies.