திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் சட்டசபையில் ஆற்றிய உரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக தெரவித்துள்ளார்.
இதற்கு ஸ்டாலின், ஆளுநருக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழகத்தில் குண்டுவெடிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, கஞ்சா விற்பனை நடைபெறும் நிலையில், ஆளுநரின் உரைக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.
தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கர்நாடகாவும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் தான் அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதுபோன் பொய்யான தகவல்களைத் தான் ஆளுநர் தனது உரையில் தவிர்த்திருக்கிறார்.
மேலும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆளுநர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால், அவை அச்சகத்திற்கு சென்றுவிட்டன. தாங்கள் விரும்பும் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தான் ஆளுநர் தனது உரையில் மாற்றம் செய்து கொண்டார். ஆளுநரை தொடர்ந்து விமர்சிப்பதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக் கொண்டால், சட்டமன்றம் கலைக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
This website uses cookies.