1 கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி தந்தால் டாஸ்மாக்கை மூடுவீங்களா? உதயநிதிக்கு ஷாக் கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!!

1 கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி தந்தால் டாஸ்மாக்கை மூடுவீங்களா? உதயநிதிக்கு ஷாக் கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!!

சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “100 நாட்களில் 1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று வலியுறுத்தி விளையாட்டுத்துறை அமைச்ச உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தால் அவரது தந்தை ஸ்டாலின் அவர்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூட வைப்பாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் தமிழகத்தில் மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பூர்ண மதுவிலக்கு என்று திமுக பிரச்சாரம்செய்த நிலையில், 2021ல் படிப்படியாக மதுவிலக்கு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், டாஸ்மாக்கை மூட அரசுக்கு மனம் இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

3 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

4 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

5 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

5 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

5 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

7 hours ago

This website uses cookies.