நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
எனவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது.
இந்த நிலையில் கவர்னர் ரவி, மூன்று நாள் பயணமாக இன்று (ஏப்.,26) டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு கோவையில் இருந்து டில்லிக்கு புறப்படுகிறார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பா.ஜ., தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் சூழலில் பழனிசாமியின் பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர் நாளை இரவு டில்லியில் இருந்து கோவை திரும்புகிறார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.