டெல்லி: மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறையில் பணமோசடி வழக்கில் ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடிகளும், சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கையும் நடந்திருப்பதையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், ஆம்வே நிறுவனம் இந்தியாவில் 2002-03 முதல் 2021-22 வரை, ரூ.27 ஆயிரத்து 562 கோடி வசூலித்து, அதற்காக ரூ.7,588 கோடி கமிஷன் தொகையை பகிர்மானர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் நிலம், தொழிற்சாலை, எந்திரங்கள், வாகனம், வங்கிக்கணக்கு, டெபாசிட் ஆகியவைற்றை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ரூ.411.83 கோடியும், வங்கி இருப்பு ரூ.345.94 கோடியும் முடக்கப்பட்டுள்ளன. விசாரணையில் ஆம்வே நிறுவனம் ரூ.21.39 கோடி பங்கு முதலீட்டை இந்தியாவில் ரூ.1996-97 முதல் 2020-21 வரை வாங்கியுள்ளது. இதற்காக ரூ.2,859.10 கோடி ஈவுத் தொகையாக ஆம்வேவுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தரப்பட்டுள்ளது.
தவிர பிரிட்வேர்ல்டுவைட் இந்தியா பிரைவேட், நெட்வொர்க் ட்வொன்டி ஒன் பிரைவேட் ஆகியவை அமலாக்கப்பிரிவு விசாரணையில் உள்ளன. இந்த நிறுவனம்தான் ஆம்வே உறுப்பினர்களுக்கு பயிற்சியும், பொருட்களும் வழங்குபவை. உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள், பொருட்களை சங்கிலித் தொடர் மார்க்கெட்டிங் மூலம் வழங்கப்படுகிறது.
திறந்த சந்தையில் கிடைக்கும் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களின் மாற்று பிரபலமான தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மலிவாக இருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.
உண்மைகள் தெரியாமல், ஏமாந்து போகும் பொது மக்கள், நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர தூண்டப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை வாங்கத் தூண்டப்பட்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். புதிய உறுப்பினர்கள் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக வாங்கவில்லை, ஆஃப்லைன் உறுப்பினர்களால் பெறப்படும் கமிஷன்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.