இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தேமுதிகவின் 18ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி, 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடங்கள் மற்றும் புடவைகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேமுதிக 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கி கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தற்போது கூட்டணி குறித்து முடிவு செய்ய சரியான நேரமில்லை. இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேமுதிக யாருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதனை தேமுதிக தான் அறிவிக்கும் கூட்டணி கட்சிகள் அல்ல, எனக் கூறினார்.
அப்போது, இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்திற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “இது இந்துக்கள் நாடு தான். தேமுதிக எந்த ஒரு சாதி, மத பாகுபாடு இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி,” என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.