இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் தான்… வாக்கு செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ட்வீட்!
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் காலை முதல் விறு விறு வாக்குப்பதிவு… 9 மணி நிலவரம் வெளியானது..!!!
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல் வாக்கு உரிமை பெற்றிருக்க கூடிய அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.
இதையடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதல்வர்பதிவிட்டுள்ளார். அதில், நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என்று தெரிவித்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.