தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. அவருக்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை பதிவு செய்திருந்தார். இதையடுத்து அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.
உளவுத்துறையினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும், அதனடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை பாஜக அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே போல நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்ததும், அந்த நபரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அச்சுறுத்தலால் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படும் ஒய் பிரிவு என்பது நாட்டில் 4வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
This website uses cookies.