தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. அவருக்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை பதிவு செய்திருந்தார். இதையடுத்து அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.
உளவுத்துறையினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும், அதனடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை பாஜக அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே போல நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்ததும், அந்த நபரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அச்சுறுத்தலால் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படும் ஒய் பிரிவு என்பது நாட்டில் 4வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.