நடுரோட்டில் தலைக்கேறிய போதையில் ரகளை செய்த பெண்கள் : முகம் சுழிக்க வைத்த 3 பேர்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு மதுபோதையில் 3 பெண்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சாலையில் நடந்த சென்றவர்களிடம் வம்பிற்கு செல்வது போல் ரகளை செய்து முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொண்ட சம்பவத்தால் அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சிலர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போலீசார் பேசிக் கொண்டு இருந்தனர். போலீசார் சொல்வதை கேட்காமல் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்பகுதில் திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்தவர்களும் என்றும், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர், மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர்கள் வீடியோ எடுத்து, இணையத்தில் பகிர்ந்தனர். .

இந்நிலையில், ரகளையில் ஈடுபட்ட 3 பேரில் சோனாலி என்ற பெண் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு, கால்கள் முறிந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் சோனாலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனாலி உள்பட 3 பெண்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

39 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

1 hour ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.