குஜராத்திற்கு எதிரான போட்டியில் பெங்களூரூ அணி தோல்வியடைந்ததன் மூலம், மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது.
சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரூ – குஜராத் அணிகள் மோதின. பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற வேண்டுமானால், இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் பெங்களூரூ அணி விளையாடியது.
முதலில் பேட் செய்த பெங்களூரூ அணிக்கு கோலி – டூபிளசிஸ் இணை வழக்கம் போல அபார தொடக்கத்தை கொடுத்தது. டூபிளசிஸ் (28), மேக்ஸ்வெல் (11), லோம்ரோர் (1), பிரேஸ்வெல் (26), தினேஷ் கார்த்திக் (0) என விக்கெட்டுக்களை இழந்தாலும், கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சதம் (7) அடித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரூ அணி 197 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் சஹா (12) ஏமாற்றம் கொடுத்தார். இதன்பிறகு, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் கில் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் ரன்களை சேர்த்தனர். விஜய் சங்கர் (53), ஷனாகா(0), மில்லர் (6) ஆட்டமிழந்தாலும், கில் தனது வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் வைத்து, அணி வெற்றியை பெறச் செய்ததுடன், சிக்சர் அடித்து சதம் விளாசினார்.
இந்த தோல்வியின் மூலம், பெங்களூரூ அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில், மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது.
இதனிடையே, குஜராத் – பெங்களூரூ அணியின் போட்டியை ஓட்டலில் பார்த்துக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், கில் அடித்த சிக்சரை பார்த்து மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.