ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் செல்வாரா என்ற சந்தேகம் பிரபல நடிகையின் ட்விட்டால் ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் அண்மையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், வேறு கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் இணைய தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, காயத்ரி ரகுராமை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து தமிழக பாஜக அறிவித்திருந்தது. இதையடுத்து கொந்தளித்த காயத்ரி, தன்னுடைய உழைப்பு வீணாகிவிட்டது. என் இளமை பறிபோய்விட்டது என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.