தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம தேதி நடைபெற்றது. வரும் ஜூன் 4 வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.
விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதனை கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது மேற்கண்ட 3 நபர்களும் சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டாவில் உள்ள ரயில் டிக்கெட்டில் பயணித்தார்கள் என்பதும் தொடர் விசாரணையில் தெரியவந்தது.
4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த ஏப்ரல் மாதமே சிபிசிஐடி வசமானது. அதன் பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, நயினார் நாகேந்திரன் , பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: குமரியில் பிரதமர் மோடி தியானம்… நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
ஆனால் பல்வேறு கரணங்கள் கூறி நேரில் ஆஜராகுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், இந்த சம்மன் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் நயினார் நாகேந்திரன்.
ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறப்பட்டது. இதனை அடுத்து, தற்போது, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் , பாஜக ஐடி விங் நிர்வாகி கோவர்தன், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் 4 பேரும் நாளை மறுநாள் (மே 31) சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.