திமுவினரின் செல்போன்களை ஒட்டு கேட்கும் மத்திய அரசு? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!
தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, எனது, என் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களை தமிழக உளவுத்துறைஒட்டுக்கேட்பதாகவும், என்னை கண்காணிப்பு கோவையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதன்பின் சமீபத்தில் தங்கள் கட்சியினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்திருந்தது. அதுவும் தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் இன்பத்துரை வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்த நிலையில் திமுகவினரின் செல்போன்கள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், திமுகவினரின் செல்போன்கள் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.