வஉசியின் பேத்திக்கு உதவியதாக அமைச்சர் வெளியிட்ட செய்தி போலியா?…உண்மையை உடைத்த வஉசியின் மகன் வழி பேத்தி…!!

மதுரை: மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு உதவியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி உண்மை இல்லை என வ.உ.சியின் பேத்தி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி என கூறப்படும் மேக்டலின் என்ற 45 வயது பெண் ஒருவர் உடல்நிலை குறைவாக மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியானது.

அவரின் உடல்நிலை மோசமான நிலையில் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் இவரை உடன் இருந்து பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை, இதனால் மருத்துவமனையில் இவர் தனியாக கஷ்டப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இதை பற்றிய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெறும் அவருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி சிகிச்சை அளிக்கப்படி உத்தரவிட்டார். மதுரை அரசு மருத்துவமனை முதல்வரை போனில் தொடர்பு கொண்டு, வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும், அவருக்கு முறையான கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பேஸ்புக்கிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்மணி வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வஉசியின் பேத்தியான மரகத மீனாட்சி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வஉசியின் பிள்ளைகளில் யாருக்கும் பல்வேந்திரன் பிள்ளை என்ற பெயர் இல்லை. மேலும், மருத்துவமனையில் வஉசியின் பேத்தி என்று சிகிச்சை பெற்று வருபவரின் தாய் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்று சொல்வதில் உண்மை தன்மை இல்லை. ஏனென்றால், வஉசியின் குடும்பத்தை சேர்ந்த யாரும் இஸ்ரேல் பெண்ணை திருமணம் செய்யவில்லை. மேலும், எங்கள் குடும்பத்தில் அனைவரும் இந்துக்கள், யாரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை. அப்படி இருக்கையில் மேக்டலின் என்ற பெண் எப்படி வஉசியின் பேத்தியாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, வஉசியின் 150வது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்தி போலி புகழை தேட கிளம்பியுள்ளனர் என மரகத மீனாட்சி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலியாக கிளம்பும் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வஉசியின் கொள்ளு பேத்திக்கு உதவியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டுள்ள செய்தியும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

46 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

49 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.