ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றாக வேண்டும் என கட்டாயத்தில் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, திமுக ஆட்சியில் நடந்து வரும் அவலங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செ செங்கோட்டையன் தேர்தல் பிரசாராத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கும் விதமாக தேர்தலில் அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல் இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பு முனையாக அமையும். யார் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.
தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து நல்ல தீர்ப்பை வழங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.