டிரெண்டிங்

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது எங்க நோக்கமே இல்ல.. ஆனால் : அமைச்சரின் ட்விஸ்ட் பதில்!

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.வ.வேலு கூறுகையில் “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, 515 கோடி ரூபாய் மதிப்பில் 212 நெடுஞ்சாலை பணிகளில் 281 கிலோ மீட்டருக்கு சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 200 பணிகள் முடிவுற்றனர், மீதமுள்ள பணிகள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும். நடப்பு ஆண்டில் 111 கோடி ரூபாய் மதிப்பில் 30 சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

மக்களுக்கான திட்டங்களில் முதல்வர் அதிமுக, திமுக பிரித்து பார்க்க மாட்டார், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் திட்டங்களை செய்து வருகிறார்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை அப்போலோ மேம்பாலப் பணிகள் 30 சதவீதமும், மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அவசர கோலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாலும் விபத்துகள் நடைபெறுகிறது, அதிமுக ஆட்சியில் விதிமுறைகளை மீறி 70 ரயில்வே மேம்பாலங்கள் அவசர கோலத்தில் கட்டப்பட்டன.

தற்போது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 30 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் முடிக்கப்பட்ட்டுள்ளன. நில எடுப்புக்காக 5 சிறப்பு டி.ஆர்.ஒ க்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.

அவனியாபுரம் முதல் நெல்ப்பேட்டை வரையில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் – வில்லாபுரம் இடையே கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.

நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது அமைச்சர் உதயநிதி நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்,

தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை.

தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்க்காக திமுக பாடுபட்டு வருகின்றது, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கவில்லை,

தமிழர்களுக்காக திமுக தொடங்கப்பட்ட கட்சியாகும், தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி செயல்படுகிறது, சில கட்சிகள் தொடங்கி காணாமல் போய் இருக்கிறது.

ஆகவே நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம், அவர்களை தடுக்க மாட்டோம், முடிந்தால் வாழ்த்து சொல்வோம்.

மக்களின் உரிமைகளுக்காக எந்த கட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதை பொறுத்து தேர்தலில் அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

மக்கள் ஏற்றுக் கொண்டால் அந்த கட்சியினர் தொடர்ந்து செயல்படுவார்கள் என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

24 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

46 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

48 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

2 hours ago

This website uses cookies.