டிரெண்டிங்

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது எங்க நோக்கமே இல்ல.. ஆனால் : அமைச்சரின் ட்விஸ்ட் பதில்!

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.வ.வேலு கூறுகையில் “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, 515 கோடி ரூபாய் மதிப்பில் 212 நெடுஞ்சாலை பணிகளில் 281 கிலோ மீட்டருக்கு சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 200 பணிகள் முடிவுற்றனர், மீதமுள்ள பணிகள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும். நடப்பு ஆண்டில் 111 கோடி ரூபாய் மதிப்பில் 30 சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

மக்களுக்கான திட்டங்களில் முதல்வர் அதிமுக, திமுக பிரித்து பார்க்க மாட்டார், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் திட்டங்களை செய்து வருகிறார்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை அப்போலோ மேம்பாலப் பணிகள் 30 சதவீதமும், மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அவசர கோலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாலும் விபத்துகள் நடைபெறுகிறது, அதிமுக ஆட்சியில் விதிமுறைகளை மீறி 70 ரயில்வே மேம்பாலங்கள் அவசர கோலத்தில் கட்டப்பட்டன.

தற்போது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 30 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் முடிக்கப்பட்ட்டுள்ளன. நில எடுப்புக்காக 5 சிறப்பு டி.ஆர்.ஒ க்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.

அவனியாபுரம் முதல் நெல்ப்பேட்டை வரையில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் – வில்லாபுரம் இடையே கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.

நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது அமைச்சர் உதயநிதி நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்,

தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை.

தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்க்காக திமுக பாடுபட்டு வருகின்றது, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கவில்லை,

தமிழர்களுக்காக திமுக தொடங்கப்பட்ட கட்சியாகும், தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி செயல்படுகிறது, சில கட்சிகள் தொடங்கி காணாமல் போய் இருக்கிறது.

ஆகவே நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம், அவர்களை தடுக்க மாட்டோம், முடிந்தால் வாழ்த்து சொல்வோம்.

மக்களின் உரிமைகளுக்காக எந்த கட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதை பொறுத்து தேர்தலில் அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

மக்கள் ஏற்றுக் கொண்டால் அந்த கட்சியினர் தொடர்ந்து செயல்படுவார்கள் என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

8 minutes ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

52 minutes ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

53 minutes ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

2 hours ago

எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…

2 hours ago

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

2 days ago

This website uses cookies.